கிணற்றில் தவறி விழுந்த 5 குரங்குகள் உயிருடன் மீட்பு

எர்ணாம்பட்டு அருகே விவசாய கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 குரங்குகளை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

Update: 2024-04-08 13:37 GMT

மீட்கப்பட்ட குரங்குகள்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஒனான்குட்டை கிராமத்தில் விவசாய கிணற்றில் 5 குரங்குகள் தவறி விழுந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் பேரணாம்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். த

கவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு தீயணைப்புத் துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 குரங்குகளையும் சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டு பேரணாம்பட்டு அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

Tags:    

Similar News