சென்னையில் 55 ஸ்பாக்களுக்கு சீல்!

Update: 2024-05-07 10:21 GMT

 ஸ்பாக்களுக்கு சீல்

சென்னை அண்ணாநகர், கோயம்பேடு பகுதிகளில் உரிமம் இன்றி இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.

ஸ்பாக்களில் மசாஜ், பாலியல் தொழில்கள் நடந்த வருவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீஸ் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். மேலும் அதன் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



Tags:    

Similar News