சென்னை ஏர்போர்டில் 7 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை ஏர்போர்டில் 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-12-11 14:48 GMT

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாய் நகரில் இருந்து, சென்னை வந்த, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமான பயணியரை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கண்காணித்தனர். சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. மூவரிடமும் விசாரித்தனர்.

இதில், சுற்றுலா விசாவில் கடந்த வியாழக்கிழமை இரவு துபாய் சென்று, நேற்று அதிகாலை சென்னை திரும்பி உள்ளனர். இது சந்தேகத்தை வலுத்தது. மூன்று பேரின் உடைமைகளையும் சோதனை செய்ததில், உள்ளாடை உள்ளிட்டவற்றில் மறைத்து வைத்து தங்கம் கடத்தியது தெரிய வந்தது.

7 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு 4 கோடி ரூபாய். விசாரணையில், மூவருமே 'கடத்தல் குருவிகள்' என தெரியவந்தது."

Tags:    

Similar News