ஆசனூர் அருகே மூங்கில் மரம் ரோட்டில் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

ஆசனூர் அருகே மூங்கில் மரம் ரோட்டில் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-27 09:50 GMT

ஆசனூர் அருகே மூங்கில் மரம் ரோட்டில் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


ஆசனூர் அருகே மூங்கில் மரம் ரோட்டில் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு சத்தி அடுத்த ஆசனூர் - கர்நாடக மாநிலம் கொள்ளேகால் செல்லும் ரோட்டில் இருபுறமும் மூங்கில் மரங்கள் ஏராளமாக உள்ளன. தற்போது கோடை காரணமாக மூங்கில் மரங்கள் காய்ந்து போய் உள்ளன. இந்த நிலையில் நேற்று மூங்கில் மரம் வேரோடு முறிந்து ரோட்டில் விழுந்ததால் வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாததால் வரிசையாக நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் மரங்களை வெட்டி அகற்றினார்கள். தன்பின்னர் அந்த வழியாக பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வழக்கம்போல் சென்று வந்தன.
Tags:    

Similar News