புற்றுநோய் விளைவிக்கும் பஞ்சுமிட்டாய்க்கு தடை ? மா.சு.தகவல்!

Update: 2024-02-17 06:19 GMT

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

புதுச்சேரியின் பஞ்சுமிட்டாய் விற்பனையில் 'ரோடமைன் பி' புற்றுநோயை விளைவிக்கக்கூடிய கெமிக்கல் உள்ளதால் அங்கு பஞ்சுமிட்டாய் தடை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மெரினா கடற்கரையில் விற்க்கப்பட்ட பஞ்சுமிட்டயிலும் 'ரோடமைன் பி ' புற்றுநோய் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'விரைவில் உணவு பாதுகாப்புத் துறை அறிவிப்பு வெளியாகும். இன்று முதலமைச்சரை சந்தித்து பஞ்சுமிட்டாய் ஆய்வு குறித்த அறிக்கையை சமர்பிக்க உள்ளோம். உணவு பாதுகாப்புத் துறை பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் தடை விதிப்பு செய்யப்படும்.' எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News