பார்த்திபன் இயக்கத்தில் வெளியாக உள்ள 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு தடை கேட்டு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு

பார்த்திபன் இயக்கத்தில் வெளியாக உள்ள 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு தடை கேட்டு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Update: 2024-07-06 04:56 GMT

டீன்ஸ்

பார்த்திபன் இயக்கத்தில் வெளியாக உள்ள 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு தடை கேட்டு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கிராபிக்ஸ் பணியாற்றிய சிவ பிரசாத் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க நடிகர் பார்த்திபனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலுவை தொகையான சுமார் 51 லட்சம் கொடுக்கும் வரை 'டீன்ஸ்' திரைப்படம் வெளியிட தடை விதிக்க வேண்டும். பேசியதை விட அதிக கிராபிக்ஸ் வேலைகள் கொடுத்ததாலேயே கிராபிக்ஸ் பணிகள் முடிக்க கால தாமதம் ஏற்பட்டது என்று சிவபிரசாத் தெரிவித்துள்ளார். சிவபிரசாத் மீது கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் பார்த்திபன் கொடுத்த புகார் மீது காவல்துறையினர் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News