பிரதமரை அவதூறாக பேசிய அமைச்சா் மீது வழக்குப் பதிவு

பிரதமா் மோடியை விமா்சித்ததாக அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீதான புகார் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

Update: 2024-03-27 01:27 GMT

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே தண்டுபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி செயல்வீரா்கள் கூட்டத்தில் பிரதமா் மோடியை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அவதூறாக விமா்சித்ததாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன், மாவட்ட தோ்தல் அலுவலா், தமிழக தலைமை தோ்தல் அதிகாரி, இந்திய தோ்தல் ஆணையா் மற்றும் மெஞ்ஞானபுரம் காவல் ஆய்வாளா் ஆகியோருக்கு மனு அனுப்பினார். புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News