லேப்டாப் சார்ஜ் போடும் பொழுது ஏற்பட்ட மின்விபத்து பெண் மருத்துவர் பலி

சென்னைக்கு பயிற்சிக்கு வந்த கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் லேப்டாப் சார்ஜ் போடும் போது மின்விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.

Update: 2024-05-28 01:14 GMT
சென்னைக்கு பயிற்சிக்கு வந்த கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். லேப்டாப் சார்ஜ் போடும் போது மின்விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. சார்ஜரை கையில் பிடித்தப்படியே இருந்தவர் சடலமாக மீட்கப்பட்டார். கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவராக பணிபுரிந்து வரும் 32 வயதான சரணிதா , என்ற மருத்துவர் சென்னைக்கு ஒரு மாத பயிற்சிக்கு வந்தவர் அயனாவரம் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி பயிற்சி வகுப்பு மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை அவரது லேப்டாப்பில் பணி புரிவதற்காக லேப்டாப் சார்ஜ் போடும் போது மின்விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்டு அயனாவரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News