வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய அரசு மத்தியில் அமைய வேண்டும்

பாராளுமன்ற தேர்தலில் வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய அரசுதான் அமைய வேண்டும், புகையிலை பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தவறு என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

Update: 2024-02-15 05:56 GMT

ஆலோசனை கூட்டம் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வணிகர் சங்கங்களின் தஞ்சை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்  நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 41வது மாநில மாநாடு வருகின்ற மே 5ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. மாநாட்டில் வணிகர்களின் பாதுகாப்பு மற்றும் கோரிக்கை குறித்து பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

அதனை மத்திய, மாநில அரசுகள் கட்டாயம் நிறைவேற்றிதர அழுத்தம் தர இருக்கின்றோம். பாராளுமன்ற தேர்தலில் வணிகரகளின் கோரிக்கையை யார், யார் நிறைவேற்றுவார்கள் என்பதை எழுத்துபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை தந்துள்ளோம்.. வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கூடிய அரசுதான் அமையவேண்டும் என வணிகர் மத்தியிலே வலியுறுத்த தொடங்கியுள்ளோம்.

கோயம்பேடு பேருந்துநிலையத்தில் இருக்கும் நகராட்சி சம்பந்தப்பட்ட கடை வியாபாரிகளுக்கு மீண்டும் கடை தருவதாக உறுதியளித்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் சென்று ,வரக்கூடியவர்ளுக்கு பல்வேறு இடர்பாடுகள் இருப்பதால் கிளாம்பாக்கத்திலிருந்து கோயம்பேடுக்கு உடனடியாக மினிபேருந்து தொடர் பேருந்து இயக்கிடவேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகள் ஏற்படுத்திய பிறகு முழுமையாக அப்புறப்படுத்தவேண்டும்.

புகையிலை தயாரிப்பு கம்பெனி ரசீது போட்டு வாங்கி மெல்லும் புகையிலை வியாபாரிகள் விற்பனை செய்கிறார்கள். அரசு அதிகாரிகள் வியாபரிகளை கைது செய்வது,கடைகளை சீல்வைப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. புகையிலை உற்பத்தியிடத்தை சீல்வைக்கவேண்டுமே தவிர ,வியாபாரிகளை அச்சுறுத்துவதாகவும்,கடைகளுக்கு சீல் வைப்பது என்பது அறவே இருக்ககூடாது என்பதை வலியுறுத்தியுள்ளோம். அதே வேளையில் வியாபாரிகள் அரசு தடைசெய்துள்ள புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றோம் என்றார்.

Tags:    

Similar News