கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் திடீர் மரணம்

தூத்துக்குடியில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-06-07 02:50 GMT

மர்ம மரணம்

ராமநாதபுரம் கீழக்கரையைச் சேர்ந்தவர் பாண்டியராஜ் மகன் விக்னேஷ் (32). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் செல்வகுமார். இவர்கள் 2பேரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார் புரத்தில் நடந்த கொலை வழக்கில் கைது செயப்பட்டு ஜாமீனில் வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இருவரும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகினர். பின்னர் இருவரும் தூத்துக்குடி சோட்டையன் தோப்பில் உள்ள வின்னேஷின் அண்ணன் கபில்தேவ் என்பவரது வீட்டில் தங்கிருருந்தனர். பின்னர் இரவில் அவர்கள் தாளமுத்துநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அப்போது விக்னேஷ் மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. அவரது தலையில் ரத்தக்காயம் இருந்துள்ளது. இதுகுறித்து தகவலின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News