பரமத்தி வேலூர் அருகே மக்கள் நலப் பணியாளர் தற்கொலை !

பரமத்தி வேலூர் அருகே மக்கள் நலப் பெண் பணியாளர் தற்கொலை செய்து கொண்டது குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-03-11 11:44 GMT

தற்கொலை

பரமத்தி வேலூர் தாலுகா வில்லிபாளையத்தைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி தமிழ்ச்செல்வி(40). இவர் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோதூர் ஊராட்சியில் மக்கள் நல பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வில்லிபாளையத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த மின் விசிரியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று தமிழ்ச்செல்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்கொலை குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நல பணியாளர் தற்கொலை செய்து  கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News