ரயிலில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

அரக்கோணம் ரயில் நிலையம் பகுதியில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-04-29 14:24 GMT

அரக்கோணம் ரயில் நிலையம் பகுதியில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கும் விதமாக அரக்கோணம் ரயில்வே இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு ரெயில்களில் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அரக்கோணத்தில் இருந்து கடப்பா வரை செல்லும் ரயில் பெட்டிகளில் தீவிர சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் இருக்கைக்கு அடியில் 45 மூட்டைகளில், சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி அடுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து 45 மூட்டை ரேஷன் அரிசி மூட்டைகளையும் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து ராணிபேட்டை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.அவர்கள் ரயிலில் ரேஷன் அரிசி கடத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News