ஆசனூர் அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் பலி !

ஆசனூர் அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் பலி ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே காட்டு யானை தாக்கி அடையாளம் தெரியாத நபர் பரிதாபமாகப் பலியானார்.

Update: 2024-04-05 08:01 GMT

ஒருவர் பலி

ஆசனூர் அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் பலி ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே காட்டு யானை தாக்கி அடையாளம் தெரியாத நபர் பரிதாபமாகப் பலியானார். சத்தி புலிகள் காப்பகம் வனப்பகுதியில் இருந்து குடிநீர் மற்றும் உணவு தேடி காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதி ரோட்டை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் திம்பம் - ஆசனூர் ரோட்டில் ஒருவர் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த காட்டு யானை ஒன்று தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். அந்த வழியாக சென்ற வாகன ஒட்டிகள் இது குறித்து வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவயிடத்திற்கு சென்ற போலீஸார் அந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு டாக்டர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இறந்த நபர் யார் என அடையாளம் தெரியாததால் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News