தமிழகத்தில் இன்று 6 மாவட்டகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !!

Update: 2024-05-13 05:10 GMT

மழை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழ் அடுக்குகளில் நிலவும் காற்று திசை மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 18 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என அறிவிப்பு விடுத்துள்ளது.

குறிப்பாக தென் மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என கணித்துள்ளது.

அதாவது தேனி, திண்டுக்கல், விருதுநகர், மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News