வாகைகுளம் விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த்

தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் நடைபெறும் வேட்டையன் திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் வாகைக்குளம் விமான நிலையம் வந்து ஆரல்வாய்மொழி சென்றார்.

Update: 2023-12-26 15:07 GMT

விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் 

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் நடைபெறும் வேட்டையன் திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் வாகைக்குளம் விமான நிலையம் வந்து ஆரல்வாய்மொழி சென்றார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 172 வந்து படமான வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார் சென்ற மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டத்திற்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

படத்தின் சில காட்சிகள் எடுக்க உள்ள நிலையில் திரைப்பட படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கே நடிகர் ரஜினிகாந்த்தை காண நூற்றுக்கணக்கான ஆண்,பெண் ரசிகர்கள் கூடியிருந்தனர்.

இதை தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை பார்த்து கைகூப்பியபடி சென்றார்.இதை அடுத்து ரசிகர்கள் ஆரவாரமாக தலைவா என கூச்சலிட்டனர். பின்னர் நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கார் மூலம் நடிகர் ரஜினிகாந்த் கன்னியாகுமரி  சென்றார்.

Tags:    

Similar News