இத்தனை கொண்டாட்டத்துக்கு தகுதியானவர் கலைஞர் - நடிகர் சூரி

ஒருவரின் பிறந்த நாளை ஒரு வருடமாக கொண்டாடுகிறார்கள் என்றால் சாதாரண விஷயம் அல்ல, அதற்கு தகுதியானவர் கலைஞர் தான் என நடிகர் சூரி தெரிவித்தார்.

Update: 2024-06-09 07:29 GMT

 நடிகர் சூரி

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ள “காலம் உள்ளவரை கலைஞர்” என்ற நவீன கண்காட்சியகத்தை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், திரைப்பட நடிகர்கள் சூரி மற்றும் அஜய் ரத்தினம் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சூரி, தமிழக அரசுக்கு எனது வாழ்த்துக்கள், ஒருவரின் பிறந்த நாளை ஒரு வருடமாக கொண்டாடுகிறார்கள் என்றால் சாதாரண விஷயம் அல்ல, அதற்கு தகுதியானவர் கலைஞர் தான். இந்த காலகட்டத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன் பிறந்திருக்கிறேன் என்றால் அதை பெருமையாக கருதுகிறேன்.சிறுவயதில் நான் பார்க்காத விஷயங்களை இங்கு வந்து பார்த்து தெரிந்து கொண்டேன். நாம் அந்த காலகட்டத்தில் சென்று வாழ்ந்தது போலிருக்கிறது என்றார்.

Tags:    

Similar News