மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நடிகர் விஜய்

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நேரில் சந்தித்து பாராட்டி ஊக்க தொகை வழங்க உள்ளார்.

Update: 2024-06-10 05:15 GMT

 நடிகர் விஜய் (பைல் படம்) 

தமிழக வெற்றிக் கழக பொது செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நேரில் சந்தித்து பாராட்டி ஊக்க தொகை வழங்க உள்ளார்.

முதற்கட்டமாக வரும் ஜூன் 28 அன்று சென்னை திருவான்மியூர் ஸ்ரீராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை,ராமநாதபுரம்,சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களை பாராட்ட உள்ளார்.

இரண்டாம் கட்டமாக ஜூலை 3 அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம்,மயிலாடுதுறை,நாகப்பட்டினம், பெரம்பலூர்,புதுசேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர்,திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர்,திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களை பாராட்ட உள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாணவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழ் மற்றும் ஊக்க தொகையை தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வழங்க உள்ளார். என தமிழக வெற்றிக் கழக பொது செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News