நடிகை ரம்பா, கலா மாஸ்டர் விஜயகாந்த் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்

கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்று பிரேமலதாவிற்கு நடிகை ரம்பா, கலா மாஸ்டர் ஆறுதல் கூறினர்.

Update: 2024-02-05 15:02 GMT

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி அவரது நினைவிடங்களுக்கு ரசிகர்கள் நடிகர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வரக்கூடிய நிலையில் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சென்று பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று திரைப்பட நடிகை ரம்பா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் கோயம்பேட்டில் உள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, தேமுதிக பொதுச்செயலாளரும் விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்

Tags:    

Similar News