திடீர் மரணம் அடைந்த முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.!!

Update: 2024-05-17 09:16 GMT

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கோவை மாநகராட்சி முன்னாள் மேயராகவும் அதிமுக முன்னாள் எம்எல்ஏவாகவும் இருந்தவர் மலரவன் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இவர் தீபா கட்சியில் செயல்பட்டார். பின்னர் அங்கிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். கடந்து சில மாதங்களாக மலரவன் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அரசியலில் இருந்து விலகி கோவை கணபதி பாரதி நகரில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த நிலையில் இன்று காலை மலரவன் மரணம் அடைந்தார். மலரவனுக்கு இந்த பெயரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தான் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் மாவட்ட செயலாளராக உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ள நிலையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவருடன் நெருங்கிய பழக்கத்தில் இருந்தவர் மலரவன்.

Tags:    

Similar News