அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!

மாம்பாக்கம் அருகே அதிமுக சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-27 06:51 GMT

அ.தி.மு.க.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மாம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தில் திறக்கப்பட்டது. திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சொரையூர் எம்.குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் வி.கே.ஆர்.சீனிவாசன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஹரிதாஸ், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் நிர்மலா ஆறுமுகம், ஒன்றிய பிரதிநிதி நாகலேரி அசோக், ஒன்றிய துணை செயலாளர் திலகா முனுசாமி உள்பட மாவட்ட, கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News