மூன்றாவது முறையாக மோடி பதவியேற்பு - பாஜகவினர் வழிபாடு

சூளகிரி அருகே உள்ள கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து 101 தேங்காய்களை உடைத்து பாஜகவினர் வழிபாடு செய்தனர்.

Update: 2024-06-10 06:00 GMT

பாஜகவினர் வழிபாடு 

நரேந்திர மோடி அவர்கள் நேற்று மாலை மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றார். நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாஜக தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம்,  சூளகிரி பகுதிகளில் சூளகிரி மத்திய ஒன்றிய பாஜக சார்பில் கோவில்களில் விஷேச பூஜைகள் நடத்தி வருகின்றனர்.. முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி 101 தேங்காய்களை உடைத்து மோடி பிரதமராவதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

  ஒன்றிய தலைவர் லட்சுமிபதி தலைமையில் நடந்த பூஜையில் பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் ராஜூ, ஒன்றிய பொதுசெயலாளர் பாப்பண்ணா,இளைஞரணி மாவட்ட பொதுசெயலாளர் சுரேஷ், ஊடகப்பிரிவு மாவட்ட துணை செயலாளர் மஞ்சுநாத், அரசாங்க பிரிவு மாவட்ட துணை தலைவர் குருபிரசாத் ஒன்றிய பொதுசெயலாளர் கோபால், ஒன்றிய துணை தலைவர் நாகராஜ், ஒன்றிய இளைஞரணி தலைவர் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் பங்கேற்றுள்ளனர்.

Tags:    

Similar News