அதிமுக - தேமுதிக 2 ஆம் கட்ட கூட்டணி பேச்சு வார்த்தை

அதிமுக தேமுதிக கட்சிகள் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. விரைவில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-06 14:43 GMT

தேமுதிக அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை 

அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொகுதி பங்கீட்டு குழு உறுப்பினர்களுடன் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தை குழுவினர் சந்தித்து 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி, தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், தேமுதிக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் அதிமுக அலுவலகத்திற்கு நேரில் வந்தனர்.

ஏற்கனவே முதல் கட்டமாக அதிமுக தொகுதி பங்கிட்டு குழுவினர் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து முதற்கட்டமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்டமாக தேமுதிக தொகுதி பங்கிட்டு குழு உறுப்பினர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குழு உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி, அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ் பி வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, பெஞ்சமின் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக குழுவினர், அதிமுகவுடன் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்றது. அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் விரைவில் நடைபெறும் என்றனர்.

Tags:    

Similar News