அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் நீீதிமன்றத்தில் ஆஜர்

Update: 2023-11-22 07:22 GMT

முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 அதிமுக முன்னாள் அமைச்சர்களுள் முக்கிய அமைச்சராக ஒருவராக இருந்து வந்த கே.பி. அன்பழகன் வருமானத்தை விட அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது பத்தாயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையினை தருமபுரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்ததை தொடர்ந்து முறையாக சம்மன் அனுப்பபட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், உறவினர்கள், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், தனபால் உள்ளிட்ட 11 பேரும் கடந்த 6ம்தேதி நடைபெற்ற வழக்கின் முதல் விசாரணைக்காக ஆஜராகியிருந்தனர், இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணைக்காக நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் என 11 பேரும் ஆஜராகினர். வழக்கின் அடுத்த விசாரணை வரும் டிசம்பர் 8ம் தேதி நடைபெற இருக்கிறது.

Tags:    

Similar News