அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து அந்த தொகுதி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக ஆலோசனை கூட்டத்தை ஜூலை 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடத்த உள்ளார்.

Update: 2024-07-06 05:05 GMT

எடப்பாடி பழனிச்சாமி

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்ற தொகுதி வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் ஜூலை 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அட்டவணைப்படி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஜூலை 10ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு காஞ்சிபுரம் தொகுதி நிர்வாகிகள் மாலை 5:30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நிர்வாகிகள். ஜூலை பதினொன்றாம் தேதி காலை 9 மணிக்கு சிவகங்கை காலை 11 மணிக்கு வேலூர் பிற்பகல் 3:30 மணிக்கு திருவண்ணாமலை என அட்டவணைப்படி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News