திமுக-வை கண்டித்து ஜுலை 23ல் அதிமுக ஆர்பாட்டம் !

Update: 2024-07-17 09:57 GMT

எடப்பாடி பழனிச்சாமி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகத்தில் நேற்று 4.83 சதவீதம் மின்கட்டணம் உயர்வு மற்றும் ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வழங்குவதை நிறுத்த முயற்சிப்பதை கண்டித்து ஜூலை23-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு என்பது நேற்று மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 4.83 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயிலை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கட்சி அமைப்பு ரீதியான 82 மாவட்டங்களிலும் ஜூலை 23-ம் தேதி காலை 10.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. என அதிமுக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News