எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் துவங்கி வைத்தார்

கல்லூரி மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்

Update: 2023-12-03 07:52 GMT

எட்ய்ஸ் விழிப்புணர்வு பேரணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம், பெரம்பலூர் மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் காவலர் வாய்ஸ் ஆகியவை இணைந்து உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் துவங்கிய இப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் உறுதி மொழி ஏற்று , பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குப்பேட்டை மற்றும் கடைவீதி வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் சென்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தி , கோஷமிட்டும் சென்றனர். இந்நிகழ்ச்சியில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், ரோட்டரி சங்கம் மற்றும் காவலர் வாய்ஸ் நிர்வாகிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News