அம்பேத்கர் பிறந்தநாள்: மத்திய இணை அமைச்சர் எல் முருகன் டுவீட்

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் டுவீட் செய்துள்ளார்.

Update: 2024-04-14 09:51 GMT

எல். முருகன்

மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வெளியிட்டுள்ள X தள பதிவில் பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவராக திகழ்ந்தவர், ‘சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்’ அவர்கள். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தலைமையேற்று இயற்றியவர்,

இந்திய சமுதாயத்தில் அனைத்து தரப்பட்ட மக்களும், அனைத்து வகையான சுதந்திரமும் பெற்றிருக்க வேண்டுமென்பதை கவனமுடன் முன்னெடுத்தார். ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பன்முகத் தன்மை கொண்டிருந்தவர், சமூகநீதிக்கான விடிவெள்ளியாக வாழ்ந்தார்.

தேசத்தின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள ‘அண்ணல் #அம்பேத்கர்’ அவர்களின் பிறந்தநாளான இன்று, அண்ணலின் சிந்தனைகளை அனைவரும் பெற்று, ‘அனைவருக்குமான தேசம்’ ஒன்று கட்டமைப்போம்..

Tags:    

Similar News