அம்பேத்கரின் நினைவு நாள்: கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கரின் 67வது நினைவு நாளையொட்டி சேலத்தில் அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2023-12-06 09:04 GMT

அம்பேத்கரின் 67வது நினைவு நாளையொட்டி சேலத்தில் அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அண்ணல் அம்பேத்கரின் 67ம் ஆண்டு நினைவுநாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் மாவட்ட மைய நூலகம் அருகே அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும், தன்னார்வலர்களும் அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Tags:    

Similar News