திருக்கோவிலூரில் திமுக நிர்வாகிகள் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

நிர்வாகிகள் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினே

Update: 2023-12-07 02:08 GMT

திமுக நிர்வாகிகள் அம்பேத்கர் நினைவு நாளில் மரியாதை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, திருக்கோவிலூர் திமுக கிழக்கு ஒன்றியம் மற்றும் திருக்கோவிலூர் நகர திமுக சார்பில், திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு துணைப் பெருந்தலைவரும், மாவட்ட திட்டமிடல் குழுவின் உறுப்பினரும், திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும் மு‌.தங்கம் மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட துணை செயலாளரும், திருக்கோவிலூர் நகர்மன்ற தலைவருமான முருகன், முன்னாள் நகர செயலாளரும், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவருமான,தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர்களின் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தினர்.உடன் திமுக அவை தலைவர் குணா, திமுக நகர செயலாளர் கோபி கிருஷ்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News