புதுக்கோட்டை கால பைரவர் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வருகை தரும் அமித்ஷா !!

Update: 2024-05-30 06:01 GMT

அமித்ஷா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் சத்தியகிரீசுவரர் சிவாலயமும் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் மிகவும் புகழ்பெற்று இருக்கும் தலங்கள் ஆகும். இரண்டுமே பல்லவர் காலத்தில் மழையை குடைத்து பாறைகளை செதுக்கி குடைவரையாய் உருவாக்கப்பட்டவை இந்த கோவில்கள் பல்வேறு அற்புதங்களையும் சுரங்கப்பாதைகளையும் கொண்டுள்ளது.

உலகத்திலேயே இரண்டாவது பெரிய பள்ளி கொண்ட பெருமாள் சத்தியமூர்த்தி பெருமாள் இங்கு தான் வீற்றிருக்கிறார். முகத்தை ஒரு சாளரம் வழியாகவும் பாதத்தை மற்றொரு சாளரம் வழியாகவும் காணும் அளவிற்கு நீளமான ஒரே கல்லால் பாறையை குடைத்து செதுக்கி உள்ளனர். இந்த கோவிலின் அருகே கோட்டையின் கீழ் பகுதியில் காவல் தெய்வமான காலபைரவர் அருள்பாளிக்கிறார்.

தமிழகத்திலேயே வடக்கு பார்த்தபடி தனி கோவில் கொண்ட பைரவர் தளம் இது ஒன்றே ஆகும். கோவில் அருகே பாம்பாறு செகிறது பாம்பு போல வளைந்து நெளிந்து காணப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. சகல தோஷ பரிகார தளமாகவும் இது விளங்கி வருகின்றது. கோட்டை பைரவர் கால பைரவ அம்சம் ஆவார். சிவம்பெருமான் பைரவ வடிவம் கொண்டதாக ஆகமங்கள் சொல்கின்றன.

இந்த கோட்டை பைரவரிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும் ராமநாதபுரம் சீமையை ஆண்ட கிழவன் சேதுபதியால் இங்குள்ள கோட்டை கட்டப்பட்டபோது கோட்டையின் தென்புற பிரதான வாயிலில் ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதிகளும் கோட்டையின் வடபுற சுவற்றில் ஸ்ரீ கோட்டை பைரவர் கோவில் அமைக்கப்பட்டது.

இக்கோவில் மத்திய தொல்லியல் ஆய்வுத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்று தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு மத்திய மந்திரி அமித்ஷா சாமி தரிசனம் செய்ய வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வாரணாசியில் இருந்து மாலை 3:20 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்னர் அவர் மாலை 3:25 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் திருமயம் கால பைரவர் கோயிலுக்கு செல்கிறார்.

அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் மாலை 5:20 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர் மாலை 5: 25 மணி அளவில் தனி விமான மூலம் திருப்பதிக்கு செல்கிறார். அமித்ஷா வருகை முன்னிட்டு திருமயத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோட்டை காலபைரவர் கோவில் மற்றும் சத்தியகிரீசுவரர் கோவில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News