சேலத்தில் சினிமா தியேட்டரில் பணியாற்றிய அசாம் தொழிலாளி திடீர் சாவு
சேலத்தில் சினிமா தியேட்டரில் பணியாற்றிய அசாம் தொழிலாளி பளியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-16 10:43 GMT
கோப்பு படம்
சேலம் கிச்சிப்பாளையத்தில் உள்ள தியேட்டரில் அசாமை சேர்ந்த சசிதர் ராம்சியாரி(42) என்பவர் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். நேற்று காலை நெஞ்சுவலிப்பதாக கூறி அவர், அருகில் இருந்தவர்களிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். அந்நேரத்தில் அப்படியே சரிந்து விழுந்தார்.
உடனடியாக 108 ஆம்புலன்சில் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழிலேயே அவர் உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.