சேலம் அருகே மயங்கி கிடந்த மூதாட்டி சாவு
சேலம் அருகே மயங்கி கிடந்த மூதாட்டி பலியானார்;
By : King 24X7 News (B)
Update: 2023-12-09 10:27 GMT
கோப்பு படம்
சேலம் பொன்னம்மாபேட்டை சீலாவரிஏரி பகுதியில் பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்தார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் அந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அ
ங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்துவிட்டார். அவர் யார்? எதுவும் தெரியவில்லை. இது தொடர்பாக அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.