அண்ணா நினைவு நாள் - சென்னையில் திமுக அமைதி பேரணி

அண்ணா நினைவு நாளையொட்டி சென்னை சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா நினைவிடம் வரை திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.

Update: 2024-02-04 01:55 GMT
பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.. இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அமைதிப் பேரணியில் அமைச்சர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணை பொது செயலாளர் கனிமொழி  உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருப்புச்சட்டை அணிந்து அமைதிப் பேரணி நடைபெற்றது. குறிப்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஸ்பெயினில் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்த உள்ளார். இந்த பேரணி முடிவில் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Tags:    

Similar News