அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் விளையாட்டு போட்டி!

அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2024-05-08 10:41 GMT

அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


வேலூர் அருகே அரப்பாக்கத்தில் உள்ள அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில், கல்லூரி அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. விழாவிற்கு அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.ராமதாஸ், செயலாளர் மற்றும் பொருளாளர் ஜி.தாமோதரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சர்வதேச கூடைப்பந்து வீரரும், வருமான வரித்துறை ஆய்வாளருமான அரவிந்த் அண்ணாதுரை ஒலிம்பிக் தீபம் ஏற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம், ஈட்டி எறிதல், கிரிக்கெட், கைப்பந்து மற்றும் கூடைப்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பிரீமியர் லீக் கோவை லைகா அணியின் ஆல்ரவுண்டர் ரபீக்உர் ரஹ்மான் கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி, மாணவர்களிடையே விளையாட்டின் அவசியத்தையும் அதன் நன்மைகளையும் விளக்கிக் கூறினார்.
Tags:    

Similar News