முதல்வரின் அறிவிப்பை கொச்சைப்படுத்தும் அண்ணாமலை - ஈஸ்வரன் எம்.எல்.ஏ

ஓசூரில் விமான நிலைய வருவதற்கு வாய்ப்பில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது முதலமைச்சரின் அறிவிப்பை கொச்சைப்படுத்துகின்ற விதத்தில் உள்ளது என கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2024-06-30 03:39 GMT

ஈஸ்வரன் எம்.எல்.ஏ 

சட்டப்பேரவை கூட்டத் தொடரை தொடர்ந்து கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு நல்ல அறிவிப்புகளை தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் பயன்படக்கூடிய தமிழகத்தின் உடைய பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய அறிவிப்புகளை முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

ஓசூரில் விமான நிலையம் 2000 நிலத்தில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பு என்பது பல தலைமுறைகளாக எதிர்பார்த்த அறிவிப்பு. தமிழகத்திற்கு நடக்கின்ற நல்லதை ஏன் பாஜகவின் உடைய தமிழக தலைவர் எதிர்க்கிறார் என்று புரியவில்லை. மொத்த தமிழகமும் ஓசூர் சர்வதேச விமான நிலையத்தை வரவேற்கிறது தமிழ்நாட்டின் உடைய பொருளாதார மேம்பாட்டிற்கு அது மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

ஆனால் தமிழக பாஜக தலைவர் மட்டும் ஓசூரில் விமான நிலைய வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் முதலமைச்சரின் அறிவிப்பை கொச்சைப்படுத்துகின்ற விதத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தினுடையை வளர்ச்சியை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை எதிர்ப்பதை அவர் கைவிட வேண்டும். தமிழகத்தினுடைய வளர்ச்சியை பேசாமல் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளார். என்றார்.

Tags:    

Similar News