அண்ணாமலை கலந்து கொள்ளும் விழா- முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அண்ணாமலை கலந்து கொள்ளும் விழாவுக்கு அனுமதி அளிப்பது குறித்து பிற்பகலுக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2024-04-06 00:52 GMT

அண்ணாமலை கலந்து கொள்ளும் விழாவுக்கு அனுமதி அளிப்பது குறித்து பிற்பகலுக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை கலந்து கொள்ளும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி அளிப்பது குறித்து நாளை பிற்பகலுக்குள் முடிவெடுக்க வேண்டும் என கோவை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளரங்கில் நடக்கக் கூடிய நிகழ்ச்சிக்கு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தால் காவல்துறை எதற்கு, அரசு எதற்கு? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து தர்மராகவன் என்பவர் மனு அளித்தார். குறிப்பிட்ட உள்ளரங்கில் கடந்த முறை நிகழ்ச்சி நடைபெற்ற போது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதால் அனுமதி மறுப்பு என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News