சுதந்திர தினத்தை முன்னிட்டு 23 காவல் அதிகாரிகளுக்கு விருதுகள் அறிவிப்பு!

Update: 2024-08-14 09:00 GMT

விருது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சுதந்திர தினத்தை முன்னிட்டு திறம்பட சேவையாற்றியதற்காக தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 23 பேருக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தின்போது காவல்துறையில் மிகச்சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்படும். 3 பிரிவுகளில் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஐஜி கண்ணன், ஐஜி பாபு, ஆணையர் பிரவீன்குமார் அபினபு, எஸ்பி ஃபெரோஸ்கான்; எஸ்.பி.க்கள் சுரேஷ்குமார், கிங்ஸ்லின், ஷியாமளா தேவி, பிரபாகர், பாலாஜி சரவணன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.

ஏஎஸ்பிக்கள் ராதாகிருஷ்ணன், ஸ்டீபன், டிஎஸ்பிக்கள் டில்லி பாபு, மனோகரன், சங்கு ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் சந்திரசேகர், சந்திரமோஜன், ஹரிபாபு, தமிழ்ச்செல்வி மற்றும் 3 எஸ்ஐக்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News