இலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது

Update: 2024-03-22 15:54 GMT

ஆண்டு விழாவில் கலந்து கொண்டவர்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள இலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி தலைமை வசித்தார். ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் அறிவழகன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக வட்டார கல்வி அலுவலர் சந்திரலேகா, ஆசிரியர் பயிற்றுனர் உத்திராபதி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணகுமார், ஆகியோர் சிறப்புரையாற்றி பள்ளிகளில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கிராம கல்வி குழு உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியினை இடைநிலை ஆசிரியர் செல்வகுமார் தொகுத்து வழங்கினார். இறுதியில் பள்ளி இடைநிலை ஆசிரியர் கலையரசி நன்றி கூறினார்.

Tags:    

Similar News