கோவை ஈஷா யோக மையத்தில் தகன மேடை குறித்த வழக்கில் இருவருக்கு முன்ஜாமீன்

கோவையில் ஈஷா யோக மையத்தில் தகன மேடை குறித்த வழக்கில், அறக்கட்டளையைச் சேர்ந்த இருவருக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-06-21 16:11 GMT

கோவையில் ஈஷா யோக மையத்தில் தகன மேடை குறித்த வழக்கில், அறக்கட்டளையைச் சேர்ந்த இருவருக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் ஈஷா மையத்தில் தகன மேடையை ஆய்வு செய்யச் சென்ற முற்போக்கு இயக்கத்தினரை தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில், ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த இருவருக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன் ஜாமீன் கோரி ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த தினேஷ் ராஜா, வெங்கடராசா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். தகன மேடை அருகே அமைக்கப்பட்ட குளத்தை பயன்படுத்த மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஈஷாவுக்கு உத்தரவிடப்பட்டது.
Tags:    

Similar News