தூக்கி கொண்டிருந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே தூக்கி கொண்டிருந்த மனைவி அறிவாளல் வெட்டிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-06-10 01:47 GMT

தூக்கி கொண்டிருந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், குரும்பரப்பள்ளி அடுத்த ஓட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலன் 45. இவரது மனைவி எல்லம்மாள் 38 இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை எல்லமாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வேலன் அருவாளால் தலையில் பலமாக வெட்டியுள்ளார். வலியால் துடித்து போன எல்லாமாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் ஓடி வருவதற்குள் கணவரின் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து இரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அங்கிருந்து பொதுமக்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சை அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த எல்லமாவின் கணவர் வேலனை குருபரப்பள்ளி போலீசார் நேற்று காலை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News