திருவாலங்காடு கோவிலில் டிசம்பர் 26ல் ஆருத்ரா தரிசனம்

சிவபெருமான் நடனமாடிய, ஐந்து சபைகளில் முதல் சபையான ரத்தினசபை என்ற சிறப்பை பெற்ற திருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசனம் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்;

Update: 2023-12-25 06:16 GMT

ஆருத்ரா தரிசனம்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் டிசம்பர் 26ம் தேதி இரவு, ஆருத்ரா அபிஷேகமும், மறுநாள் அதிகாலையில் கோபுர தரிசனமும் நடக்கிறது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. இந்த கோவில், சிவபெருமான் நடனமாடிய, ஐந்து சபைகளில் முதல் சபையான ரத்தினசபை ஆகும். ஆண்டுதோறும், ஆருத்ரா அபிஷேகம் மற்றும் கோபுர தரிசனம் விமரிசையாக நடக்கும். அந்த வகையில், இந்தாண்டு ஆருத்ரா அபிஷேகம், டிசம்பர் 26ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, நடராஜ பெருமானுக்கு 34 வகையான பழங்களால் அதிகாலை 3:00 மணி வரை அபிஷேகம் நடைபெறும். அதிகாலை 5:00 மணிக்கு, கோவில் முன் அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கும்; அப்போது, கோபுர தரிசனமும் நடைபெறும். இதில் தமிழகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில பக்தர்கள் பங்கேற்பர். முன்னேற்பாடு பணிகளை திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News