அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தள்ளி வைப்பு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-01-10 11:57 GMT

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று வழக்கு விசாரணை நடைபெற இருந்த நிலையில் மாவட்ட நீதிபதி செல்வம் விடுப்பு காரணமாக மாவட்ட நீதிமன்ற நீதிபதி பொறுப்பு சுவாமிநாதன் வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்திரவிட்டார்.  இன்றைய வழக்கு விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை.
Tags:    

Similar News