கிண்டியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவியருக்கு விழிப்புணர்வு.....
கிண்டியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவியருக்கு விழிப்புணர்வு நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-11 07:39 GMT
விழிப்புணர்வு
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையாளர் ராதாகிருஷ்ணன், தலைமையில், மாணவியர் மற்றும் அலுவலர்கள் அனைவரும் வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில், தேர்தல் நடத்தும் அலுவலர்/தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், மண்டல அலுவலர் சீனிவாசன், கல்லூரி முதல்வர் மலர்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.