குமாரபாளையம் எம்எல்ஏ அலுவலகத்தில் ஆயுத பூஜை: முன்னாள் அமைச்சர்
குமாரபாளையம் சட்ட மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற ஆயுதபூஜை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார்.u89;
By : King 24X7 News (B)
Update: 2023-10-23 09:29 GMT
முன்னாள் அமைச்சர்
தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆயுதபூஜை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் குமாரபாளையம் நகர கழக செயலாளர் பாலசுப்ரமணி,பள்ளிபாளையம் நகர கழக செயலாளர் வெள்ளியங்கிரி, பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர்கள் குமாரேசன், செந்தில் மற்றும் ஆலாம்பாளையம் பேரூர் கழக செயலாளர் செல்வதுரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.