டிராக்டரில் பேட்டரி திருட்டு

நெமிலி அருகே டிராக்டரில் பேட்டரி திருடு போன விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-24 16:52 GMT

டிராக்டரில் பேட்டரி திருட்டு

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த எஸ்.கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சடையாண்டி (47), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது டிராக்டரை, விவசாய நிலத்தில் நிறுத்தியிருந்தார். நேற்று காலை பார்த்தபோது டிராக்டரில் பேட்டரி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பேட்டரி திருடப்பட்டுள்ளதாக கூறி உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News