கரை ஒதுங்கிய திமிங்கலம்!

தூத்துக்குடியில் அருகே கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய திமிங்கலம் தூத்துக்குடி வன உயிரின சரகத்தை சேர்ந்த அலுவலர்களால் கடலில் மீண்டும் விடப்பட்டது.

Update: 2024-05-19 13:46 GMT
தூத்துக்குடியில் அருகே கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய திமிங்கலம் தூத்துக்குடி வன உயிரின சரகத்தை சேர்ந்த அலுவலர்களால் கடலில் மீண்டும் விடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் நரிப்பையூர் ஊரை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் இன்று திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சென்ற தூத்துக்குடி வன உயிரின சரகத்தை சேர்ந்த அலுவலர்களால் திமிங்கலமானது கடலில் மீண்டும் விடப்பட்டது. அவ்வாறு கடலில் விடப்பட்ட திமிங்கலம் கடற்கரையோரம் சுற்றி வந்தது. இந்நிலையில் வேறு இரண்டு திமிங்கலங்கள் கடற்கரைப் பகுதியில் தென்பட்டன. கரை ஒதுங்கிய திமிங்கலம் மற்ற இரு திமிங்களுடன் சேர்ந்து ஆழ்கடலுக்கு திரும்பியது இது பிக்மி கில்லெர் வேல் எனப்படும் திமிங்கலமாகும். இது இந்தியாவில் மிக அரிதாகவே தென்பட்டுள்ளது. இந்தத் திமிங்கலத்தை மீண்டும் கடலுக்குள் வழிகாட்டி நீந்தி அழைத்து சென்ற வேட்டை தடுப்பு காவலர். செல்வத்தை வனத்துறை அதிகாரிகள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News