பாஜக நிர்வாகி ஜாமின் மனு தள்ளுபடி

மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான பாஜக நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Update: 2024-04-11 00:40 GMT

மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான பாஜக நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான பாகாஜ நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தருமபுரம் தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச விடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்ததாக வினோத், செந்தில், விக்னேஷ் ஆகியோர் மிரட்டியதாக புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உடந்தையாக இருந்ததாக பதிவான புகாரில் மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க தலைவர் அகோரம் கைது செய்யப்பட்டார். அகோரத்திற்கு எதிராக 47 வழக்குகள் நிலுவையில் உள்ளன, குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் தலைமறைவாக உள்ளனர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News