கள்ளகுறிச்சி : பாஜ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Update: 2023-11-28 07:50 GMT

பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளகுறிச்சி மாவட்டம், பகண்டை கூட்ரோட்டில் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் ஒன்றிய தலைவர்கள் சுந்தர், சேகர், திருக்கோவிலுார் ஒன்றிய தலைவர்கள் அறிவழகன், சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஜயதுரை, ராஜேஷ், தியாகராஜன், பட்டியலணி மாநிலச் செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட துணைத்தலைவர் கஜேந்திரன், விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, பிரிவு மாவட்ட தலைவர்கள் அய்யப்பன், முருகன், கருணாகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசன், ஒன்றிய பார்வையாளர்கள் குமார், ஜோதிநாதன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 
Tags:    

Similar News