வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எல். முருகன்

மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

Update: 2024-06-21 16:23 GMT

எல்.முருகன்

மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‌. இன்று, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் நான் போட்டியிட்ட நீலகிரி பாராளுமன்றத் தொகுதியில், நமது தாமரைச் சின்னத்திற்கு வாக்களித்து ஆதரவு தெரிவித்த மக்களைச் சந்தித்து, நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

முதற்கட்டமாக, மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டேன்.  பிரதமர் மோடி தலைமையின் கீழ் மத்திய அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றும் இப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் சென்றடைய வழிவகை செய்வோம் என்பதையும், தேர்தலின் போது நாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான பணிகளை செய்வோம் என்பதையும் அம்மக்களிடம் எடுத்துரைத்தேன்" என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News