பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ் சென்னை வருகை

பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் 3 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார், மக்களவைத் தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Update: 2024-04-07 10:48 GMT

பி.எல் சந்தோஷ்

3 நாள் பயணமாக பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் இன்று காலை சென்னை வந்துள்ளார். சென்னைக்கு வருகை தந்துள்ள பி.எல்.சந்தோஷ் பாஜகவின் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களுடன் அமைந்தகரை அய்யாவு மகாலில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரையை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து தொகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டிய பிரசார வியூகம் குறித்து தேர்தல் பொறுப்பாளர்களுக்கு பி.எல்.சந்தோஷ் அறிவுறுத்தல் வழங்கினார். பாஜக வலுவாக உள்ள தொகுதிகள் குறித்தும் , கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தொகுதிகள் குறித்தும் தேர்தல் பொறுப்பாளர்களுடன் பி.எல் சந்தோஷ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வாக்குப்பதிவுக்கு ஓரிரு நாட்கள் முன்பாக சில கட்சிகள் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்யக்கூடும் என்பதால் பாஜக நிர்வாகிகள் கண்ணும் ,

கருத்துமாக செயல்பட வேண்டுமெனவும் , பிற கட்சிகளின் தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபடுவது தெரிந்தால் அது குறித்து உடனுக்குடன் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிப்பதுடன் , பாஜக தலைமைக்கும் தெரியப்படுத்துமாறு பொறுப்பாளர்களுக்கு பி.எல்.சந்தோஷ் அறிவுறுத்தல் வழங்கினார்.

Tags:    

Similar News